Posts

Showing posts from 2022

பதிலளிப்பதில் நுட்பங்கள் - ரிஷி ஆருணி நமக்கு வழிகாட்டுகிறார்

Image
  பதிலளிப்பதில் நுட்பங்கள் - ரிஷி ஆருணி நமக்கு வழிகாட்டுகிறார்   முனைவர் ம ஜயராமன்   அறிமுகம் கடந்த முறை “ கேள்வி படுத்திய பாடு ” என்று - கேள்வி தொடர்பான உபநிடத கருத்துக்களை பார்த்தோம். இப்போது உபநிடதங்கள், பதிலளிக்கும் விதம் பற்றி என்ன கூறுகின்றன என்பதனை கவனிப்போமா ? சாந்தோக்கிய உபநிடதம் சாமவேதத்தின் ஒரு பகுதியாகும்.    இந்த வேதப் பகுதியின் ஆறாவது அத்தியாயத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த ஒரு   உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.   அதன் அடிப்படையில் பதிலளிக்கும் விதம் பற்றி பார்ப்போம்     தந்தையின் கேள்வியும் மகனின் கர்வம் மிகுந்த அறியாமையும்   தந்தை ஆருணி சுற்றுபிரயாணங்களில் ஈடுபட்டதால் , தாமதமாக பன்னிரெண்டாவது வயதில் தான் மகனான சுவேதகேதுவை தகுந்த குருவிடம் படிக்க அனுப்புகிறார்.   தனது மகன் படிக்காமல் தற்குறியாக ஆகிவிடக்கூடாது என்பது அவரது கவலை. பன்னிரெண்டாவது வயதில் குருகுலவாசம் செய்யத்துவங்கிய சுவேதகேது பன்னிரெண்டு ஆண்டுகள் குருகுலவாசம் முடிந்து தனது இருபத்தி நான்காவது வயதில் வீடு திரும்புகிறான்.   தாமதமாக கல்வி கற்கச் சென்றதாலோ என்னவோ -

ஒரு கேள்வி படுத்திய பாடு! (கல்வியியல் தொடர்பான கட்டுரை)

Image
  ஒரு கேள்வி படுத்திய பாடு!   முனைவர் ம ஜயராமன் (வித்யாபாரதியின் -  வித்யாவாணி மாத இதழில் (ஜனவரி 2022 ) கல்வி பற்றி - வெளியான என் கட்டுரை       கால-யந்திரத்தில் பயணம்  அரையாண்டு விடுமுறைக் காலம் அல்லவா. கொரோனா ஊரடங்கு தான் இல்லையே! சிறிது சுற்றுப்பயணம் செல்லலாமே!    கால-யந்திரத்தில் பயணம் செய்வோம். சில ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிச் சென்று ஒரு தபோவனத்தை அடைகிறோம். இது சுகேஷ முனிவரின் ஆசிரமம்.  ஆ!   அங்கு யார் தேரில் வந்து இறங்குவது ?  ஹிரண்யநாபன் எனும் இளைஞனின் தேர் தான் ஆசிரமத்திற்கு வெளியில் வந்து நிற்கிறது.  ஆசிரமத்திற்கு உள்ளே நுழைந்து , சுகேஷ முனிவரை வணங்கி நிற்கும் ஹிரண்யநாபனை நாம் பார்க்கிறோம். அவன்   கூறுகிறான் - "முனிவரே! பதினாறு கலை புருஷன் (ஆன்மா) பற்றி எனக்கு உபதேசித்து அருளுங்கள்" .  சுகேஷ முனிவர் கூறுகிறார் " ஹிரண்யநாபா! இது பற்றி எனக்குத் தெரியாது."  நம்பிக்கையின்றி அங்கேயே தயங்கி நிற்கிறான் ஹிரண்யநாபன்.  அவனது தயக்கத்தின் காரணத்தை உணர்ந்த சுகேஷ முனிவர் கூறுகிறார் - "எனக்கு நீ கேட்ட தத்துவம் பற்றி உண்மையாகவே தெரியாது.